அனுராதபுரத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

by Staff Writer 08-10-2022 | 8:07 PM

Colombo (News 1st) அனுராதபுரம் - கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. 

கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உதித்த எரன்ன ஜயதிலக்க  என்ற லோலுகஸ்வெவ பகுதியை சேர்ந்த  35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். 

குறித்த நபர் நேற்று இரவு மனைவியின் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் வீட்டை விட்டு வௌியேறிய  சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இரண்டு  குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறே குறித்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். 

கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சில சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.