Colombo (News 1st) நாட்டில் 110 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள மருந்துகளைக் கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதாக அமைச்சின் சர்வதேச மருந்துகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
உயிர் பாதுகாக்கும் 17 வகையான மருந்துகள் இருப்பிலுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருந்து தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில், பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின. உலக வங்கியின் நிதியுதவி மூலம் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை முற்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்தார்.