English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Oct, 2022 | 3:20 pm
Colombo (News 1st) நாட்டில் 110 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள மருந்துகளைக் கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதாக அமைச்சின் சர்வதேச மருந்துகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
உயிர் பாதுகாக்கும் 17 வகையான மருந்துகள் இருப்பிலுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருந்து தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில், பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின. உலக வங்கியின் நிதியுதவி மூலம் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை முற்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்தார்.
02 Dec, 2023 | 06:58 PM
02 Dec, 2023 | 03:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS