22ஆவது அரசியலமைப்பு திருத்த விவாதம் ஒத்திவைப்பு

22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதிக்க தீர்மானம்

by Staff Writer 06-10-2022 | 1:07 PM

Colombo (News 1st) 22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.