இல்லங்கள் தோறும் செயற்றிட்டம்: இரண்டாம் நாள்

யாழ்ப்பாணம், மாத்தளை, களுத்துறை மாவட்டங்களில் கம்மெத்த குழாத்தினர்...

by Staff Writer 06-10-2022 | 7:45 AM

Colombo (News 1st) இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களை தேடி இல்லங்கள் தோறும் பயணிக்கும் கம்மெத்த மனிதநேய செயற்றிட்டத்தின் ஆறாவது கட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் யாழ்ப்பாணம், மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்றும்(06) முன்னெடுக்கப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்துடன் இணைந்துள்ளனர். 

தற்போது நாட்டின் அனைவராலும் அறியப்பட்டுள்ள மக்கள் சக்தி செயற்றிட்டமானது, நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரணாக திகழ்கின்றது.

மக்களுக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் சக்தி செயற்றிட்டமானது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையே இலக்காக கொண்டுள்ளது.