பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 3 நிறுவனங்கள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட 3 அரச நிறுவனங்கள்

by Staff Writer 06-10-2022 | 7:29 AM

Colombo (News 1st) அரச நிறுவனங்கள் சிலவற்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ஆகியன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.