.webp)
Colombo (News 1st) மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவலயில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கமன்கெதரயில் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் சென்ற சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
51 வயதான தந்தை, 23 மற்றும் 24 வயதான அவரது இரண்டு மகன்களும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.