3 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி வர்த்தமானி

3 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Chandrasekaram Chandravadani 04-10-2022 | 9:05 AM

Colombo (News 1st) மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய,

⭕ மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள்
⭕ எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு
⭕ வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் 
ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.