சோள இறக்குமதிக்கு அனுமதி

சோள இறக்குமதிக்கு அனுமதி

by Staff Writer 04-10-2022 | 1:48 PM

Colombo (News 1st) சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தியாவிடமிருந்து 225,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்த அனுமதிக்கு அமைய, தற்போது சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதனூடாக கால்நடை தீவனங்களுக்கான விலைகள் ஓரளவு குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவில் சோளத்தின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதியில் தாமதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.