.webp)
Colombo (News 1st) காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் நாளை (05) காலை வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிரதேசங்களை மிக அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.