எரிபொருள் முற்பதிவிலிருந்து விலக தீர்மானம்

முற்பதிவு நடவடிக்கையிலிருந்து விலக தீர்மானம் - எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

by Staff Writer 04-10-2022 | 6:31 AM

Colombo (News 1st) இன்று(04) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை மீள அறவிடுவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்  நடவடிக்கை எடுத்தமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையிலிருந்து விலகுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்