150 Bn. ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது

நிர்மாண திட்டங்களுக்காக 150 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது - தேசிய கட்டட நிர்மாண சங்கம்

by Staff Writer 03-10-2022 | 3:31 PM

Colombo (News 1st) கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணத் திட்டங்களுக்கு 150 முதல் 200 பில்லியன் ரூபா வரை அரசாங்கத்திடமிருந்து அறவிடப்பட வேண்டியுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி கிடைப்பதில் சுமார் ஒரு வருட தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கத்தின் தலைவர் M.D.போல் தெரிவித்துள்ளார்.