தங்கோவிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

தங்கோவிட்ட துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 03-10-2022 | 5:00 PM

Colombo (News 1st) தங்கோவிட்ட மதுபான விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 2 சந்தேகநபர்களும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களிடம் நீதவான் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் 14ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சந்தேகநபர்களை அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் தங்கோவிட்ட மதுபான விற்பனை நிலையமொன்றில் நேற்று(02) கொள்ளையிடச் சென்ற சந்தேகநபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான, கலென்பிந்துனுவெவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்த 29 வயதான யுவதியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஏனைய செய்திகள்