160 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

ஓமனிலிருந்து வருகை தந்த மூவரிடம் இருந்து 160 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

by Bella Dalima 30-09-2022 | 3:13 PM

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் 160 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

7.5 கிலோகிராம் தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்தது.

ஓமன் - மஸ்கட்டில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த பெண் ஒருவரிடமும் இரண்டு ஆண்களிடமும் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனிடையே, அதே விமானத்தில் இருந்து இலங்கைக்கு வந்த மற்றுமொரு பயணியிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூட்சுமமான முறையில் அந்நபர் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  தங்கத்தின் பெறுமதி 12 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டது.