உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு

உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: அறிவித்தார் அதிபர் புதின்

by Bella Dalima 30-09-2022 | 6:30 PM

Russia: உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட  Kurzon, Zaporozhye, Donetsk மற்றும் Luhansk ஆகிய உக்ரைனின் பிராந்தியங்களே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பிராந்தியங்களினதும் மக்கள் ரஷ்யர்களாக கருதப்படுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
 
ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்த இந்த பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செய்து வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யா உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில், ரஷ்யாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது. 

அந்த இணைப்பிற்கு முன்னதாக, அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்த பகுதியை சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. எனினும், அந்த பொது வாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன. 

இந்தச் சூழலில், NATO அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ஆம் திகதி படையெடுத்தது. 

அதன் ஒரு பகுதியாக கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், தெற்கு உக்ரைனின் கொ்சான், Zaporozhye ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

கிரீமியாவைப் போலவே, அந்த பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்வது தொடா்பான பொது வாக்கெடுப்பை ரஷ்யா கடந்த வாரம் தொடங்கி 4 நாட்களாக நடத்தியது.

அந்த பொது வாக்கெடுப்பு சோடிக்கப்பட்டது எனவும் ரஷ்யாவிற்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும் எனவும் கூறிய மேற்கத்திய நாடுகள், பொது வாக்கெடுப்பின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதனை அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. 

அந்த நாடுகள் கூறியதைப் போலவே, பொது வாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97% போ் வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.