Colombo (News 1st) சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா - சாமிமலை பகுதியில் நேற்று(27) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சாமிமலை பகுதியை சேர்ந்த 36, 38, 39 மற்றும் 44 வயதான 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று(28) ஆஜராகுமாறு அறிவித்து பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் நோர்வூட் போட்ரி தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் நோர்வூட், மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.