845,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம்

பெரும்போகத்தில் 845,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம்

by Staff Writer 27-09-2022 | 8:25 AM

Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தில் 845,000 ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு போகத்தில் 512,000 ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறு போகத்தில் சுமார் 80 வீதமான அறுவடை கிடைத்ததாகவும் விவசாய சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.