பெட்ரோல், டீசலின் தரம் குறித்து பரிசோதிக்க திட்டம்

பெட்ரோல், டீசலின் தரம் தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை

by Staff Writer 27-09-2022 | 10:14 AM

Colombo (News 1st) பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்கான மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருட்களின் தரம் குறித்து இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.