காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 27-09-2022 | 8:54 AM

Colombo (News 1st) எப்பாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

எப்பாவல கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். 

58 மற்றும் 64 வயதான இருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர். 

விறகு வெட்டுவதற்காக வீட்டிற்கு அருகிலுள்ள காட்டு பகுதிக்கு சென்ற ஒருவரும் தமது மகளின் வீட்டிற்கு சென்ற ஒருவருமே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.