தேர்தல் நடத்தக் கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம்

உடனடியாக தேர்தல் நடத்தக் கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 27-09-2022 | 6:21 PM

Colombo (News 1st) அரசாங்கத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரி மாத்தளையில் இன்று (27) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் மத்திய நிலையமும், சமூக இளைஞர் அமைப்பும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

மாத்தளை பால் சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி, மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

விரைவில் தேர்தலை நடத்துமாறும், பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.