Colombo (News 1st) இன்று(27) 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளை(28) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி இன்று(27) செயலிழந்தது.
அதன் காரணமாக நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.