மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுமா?

நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் - இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

by Staff Writer 27-09-2022 | 9:50 AM

Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

இதனால் நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் பிறப்பாக்கிகளில் ஒரு மின் பிறப்பாக்கி திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 900 மெகாவாட் மின்சாரத்தை விநியோகித்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில், தற்போது 300 மெகாவாட் மின்சாரத்தை பிறப்பிக்கும் ஒரு மின் பிறப்பாக்கி மாத்திரமே செயற்படுகின்றது.