நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிணையில் விடுவிப்பு

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிணையில் விடுவிப்பு

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2022 | 3:52 pm

Colombo (News 1st) பிரபல பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை பிணையில் விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் தொடர்பில் 200 கோடி இந்திய ரூபா மோசடி வழக்கு தொடர்பாக அவர் இன்று(26) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்போது 50,000 இந்திய ரூபா பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகரிடம் நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வரும் அதேவேளை, அவரிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்