ஜப்பான், பிலிப்பைன்ஸுக்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி நாளை(26) ஜப்பான், பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

by Staff Writer 25-09-2022 | 7:08 PM

Colombo (News 1st) ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளை(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளார்.

2 நாட்கள் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸுக்கு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Bongbong Marcos உடனும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa உடனும் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஊடகப் பணிப்பாளர் ஷனுக்க கருணாரத்ன, நிலையான அபிவிருத்தி தொடர்பான பணிப்பாளர் ரந்துல அபேவீர மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோர் ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.