79 பேருக்கு பொலிஸ் பிணை

சோசலிச இளைஞர் அமைப்பின் போராட்டம்; 79 பேருக்கு பொலிஸ் பிணை

by Staff Writer 25-09-2022 | 5:15 PM

Colombo (News 1st) சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் 82 பேர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 79 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மூவருக்கு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நேற்றைய(24) போராட்டத்தில் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு(24) இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 தேரர்களும் 77 ஆண்களும் 04 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.