A/L மாணவர்களுக்கு மீண்டும் 5,000 ரூபா உதவி தொகை

உயர்தர மாணவர்களுக்கு மீண்டும் 5,000 ரூபா உதவி தொகை

by Staff Writer 25-09-2022 | 7:25 PM

Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையில் தோற்றி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலயமொன்றில் 30 பரீட்சார்த்திகள் என்ற அடிப்படையில், நாடளாவிய ரீதியிலுள்ள 99 கல்வி வலயங்களை சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு புலமைப்பரிசிலுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உ/த பரீட்சைக்கு தோற்றும் வரையான அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் வழங்கப்படும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.