English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Sep, 2022 | 7:01 pm
Colombo (News 1st) பதுளை- எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல ரொக் வனப்பகுதியில் இன்று மதியம் தீ பரவியுள்ளது.
இதன்போது, சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும், தீயை கட்டுப்படுத்த எல்ல பிரதேச செயலகம் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளது.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஸ்பிரிங்வௌி – போகஸ்வத்த வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இருந்து காட்டுத்தீ பரவியதாகவும், இதனால் சுமார் 3 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான புல்வௌி முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
29 Nov, 2023 | 07:24 PM
29 Nov, 2023 | 05:34 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS