.webp)
Colombo (News 1st) Glyphosate களைக்கொல்லி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, முழுமையான கண்காணிப்பின் கீழ் Glyphosate இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை பரிசீலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதற்கு முன்னதாக தேயிலை செய்கைக்கு மாத்திரமே Glyphosate களைக்கொல்லி இறக்குமதிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.