கடுவளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர்வெட்டு

கடுவளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் 16 மணி நேர நீர்வெட்டு

by Chandrasekaram Chandravadani 20-09-2022 | 9:28 AM

Colombo (News 1st) நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர - ரணால, கடுவளை, மாபிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த்தாங்கியை சுத்தப்படுத்தும் பணி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.