ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளையும்(20) நாளை மறுதினமும்(21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 19-09-2022 | 4:00 PM

Colombo (News 1st) நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய தினங்களில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.