.webp)
Colombo (News 1st) கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் திட்டம் தொடர்பான திட்டத்தை சர்வதேச கடன் வழங்குனர்களிடம் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த திட்டத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வௌியிடப்பட்ட அறிக்கையொனன்றை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.