2ஆவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு ஆரம்பம்

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு ஆரம்பம்

by Staff Writer 19-09-2022 | 3:44 PM

Colombo (News 1st) சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் லண்டன் நகரிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ஆரம்பமாகின. 

1952ஆம் ஆண்டு பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக திகழ்ந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்ததை அடுத்து, 70 வருடங்கள் 214 நாட்கள் அவர் பொறுப்புடன் வகித்த தலைமைப் பதவி கடந்த 8ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அன்று முதல் இன்று வரை மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன.

மகாராணியின் பூதவுடலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட  உலக தலைவர்கள் பலரும் இறுதி அஞ்லி செலுத்தினர்.