பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் யூரியா உரம் இலவசம்

by Bella Dalima 17-09-2022 | 5:38 PM

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் யூரியா உரத்தை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அங்குனகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற சிறு அளவிலான விவசாய முயற்சியாளர்களுக்கான வேலைத்திட்டத்தில் இன்று கலந்துகொண்ட போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்படவுள்ள 50 கிலோகிராம் யூரியா உரம் போதாமல் போகும் விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரத்தை 10,000  ரூபா என்ற மானிய விலையில் விநியோகிக்கவும் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இழப்பீட்டுக்கான உரமும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

இதனை தவிர விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள், கிருமி நாசினிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.