.webp)

Colombo (News 1st) கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு ரயிலொன்று தடம்புரண்டதை அடுத்து, கரையார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து வௌ்ளவத்தை வரை ஒரு ஒழுங்கையில் மாத்திரமே ரயில்கள் பயணிக்கின்றன.
ரயில் தடம்புரண்டதால் சேதமடைந்த ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் இதுவரை நிறைவடையவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
