Colombo (News 1st) 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
நேற்று முன்தினம்(11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி, இலங்கை அணி இவ்வருடத்துக்கான கிண்ணத்தை தனதாக்கியது.
இலங்கை அணி ஆறாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரித்த சந்தர்ப்பம் இதுவாகும்.