ஆசிய கட்டழகர் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியது

by Staff Writer 07-09-2022 | 1:50 PM

Colombo (News 1st) கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கட்டழகர் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியது. 

ஆசிய கட்டழகர் தொடரில் இலங்கை சார்பில் 8 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 

65 கிலோ கிராம் எடைப்பிரிவு மற்றும் பகிரங்க பிரிவில் இலங்கை வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன் மாஸ்டர்ஸ் பிரிவில் வௌ்ளிப் பதக்கத்தை தமதாக்கினர்.