"வீதி பாதுகாப்பு உலக கிண்ண" கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இலங்கை லெஜன்ட்ஸ் குழாம் நாட்டிலிருந்து பயணமானது

by Staff Writer 06-09-2022 | 1:56 PM

colombo (News 1st) "வீதி பாதுகாப்பு உலக சம்பியன்ஷிப்" கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

சிரேஷ்ட நட்ச்சத்திர சகல துறை வீரர் டீ.எம்.டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் சமிந்த வாஸ், சனத் ஜயசூரிய, நுவன் குலசேகர, கௌஷல்ய வீரரத்ன, சாமர சில்வா, உபுல் தரங்க, அசேல குணரத்ன, சாமர கப்புகெதர உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.

வீதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த கிரிக்கெட் தொடர் இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொடரின் முதல்கட்ட போட்டி இடம்பெற்றதுடன் இதில் இந்திய லெஜன்ட்ஸ் அணி சம்பியனாகியிருந்தது. 

இலங்கை அணி இரண்டாமிடத்தைப் பிடித்திருந்தது.