.webp)

Colombo (News 1st) ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு காரணமாக, சுமார் 2000 பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
