கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணித்தியால நீர் வெட்டு

by Chandrasekaram Chandravadani 03-09-2022 | 3:34 PM


Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(03) காலை 8 மணி முதல் நாளை(04) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, கோட்டை மற்றும் கடுவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம - பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.