நீர் கட்டணத்தை செலுத்தத் தவறினால் தாமதக் கட்டணம்

நீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம்

by Staff Writer 28-08-2022 | 4:56 PM

Colombo (News 1st) மூன்று மாதங்களுக்கு மேல் நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களிடம் இருந்து இரண்டரை சதவீத தாமதக் கட்டணம் வசூலிக்க தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களிடமிருந்து இதற்கு முன்னர் தாமதக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை என சபையின் பிரதி பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு  பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால்  பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 

ஏனைய செய்திகள்