நாளையும் (27) மூன்று மணித்தியால மின்வெட்டு தொடரும்

நாளையும் (27) நாளை மறுதினமும் (28) மூன்று மணித்தியால மின்வெட்டு தொடரும்

by Bella Dalima 26-08-2022 | 7:35 PM

Colombo (News 1st) நாளையும் (27) நாளை மறுதினமும் (28) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும்,  P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

MNOXYZ வலயங்களில் அதிகாலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வணிக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.