.webp)
Colombo (News 1st) கடன் நெருக்கடியில் இருந்து இலங்கையை விடுவிக்கும் நோக்கில், கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதன் நோக்கம் என Reuters செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தையில் சீனாவின் பங்கேற்பு குறித்து தெளிவின்றி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.