சேனாதி குருகேவிற்கு செப்டம்பர் 2 வரை விளக்கமறியல்

சேனாதி குருகேவிற்கு செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 25-08-2022 | 4:10 PM

Colombo (News 1st) காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளரான சேனாதி குருகே எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

காலி முகத்திடல் பேராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான போராட்டத் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சேனாதி குருகே மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இரண்டு இராணுவ வீரர்களை கடத்திச்சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே சேனாதி குருகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.