.webp)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளையும் (20) நாளை மறுதினமும் (21) நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த வலயங்களில் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.