Colombo (News 1st) கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி நிலையாக பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மத்திய வங்கியின் துணை நில் வைப்பு வசதி வீதத்தை (SDFR) 14.50 ஆக பேணவும் துணை நில் கடன் வழங்கல் வசதி வீதத்தை (SLFR) 15.50 ஆக பேணவும் மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளில் எதிர்ப்பார்க்கப்பட்டளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டிலும் பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.