Colombo (News 1st) சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தினை பெற்றுக்கொள்ள ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
www.agrarian.lk எனும் இணையதளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022/23 பெரும்போக சோளப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா உரம் பெற்றுக்கொடுக்க விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒன்லைன் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கான App ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.