Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை விரைவில் நாட்டிற்கு அழைத்து வரவும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.