Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகொன்றில் சென்ற போது இன்று அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
4 ஆண்களும் 4 சிறார்களும் 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.