டானிஷ் அலிக்கு பிணை

by Staff Writer 15-08-2022 | 2:50 PM

Colombo (News 1st) ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து ஔிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க இன்று(15) பிணை உத்தரவை வழங்கினார்.

25,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்வதற்கு சந்தேகநபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளால் டானிஷ் அலி இன்று(15) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பிணை வழங்கப்பட்டுள்ள டானிஷ் அலி, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்