.webp)
பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் புதிய திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கிணங்க ஏற்கனவே தொழிற்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை ஆலோசனைக்குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழு என்பவற்றை மாற்றீடு செய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவொன்றை நிறுவியுள்ளது.
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவிற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபேரத்ன தலைமை வகிக்கின்றார்.
தனியார் துறையையும் கல்வித்துறையையும் சேர்ந்த 17 பேர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.